தனது சொத்து கணக்கை தான் காட்ட தான் தயாராக இருப்பதாகவும், நடிகர் கமல்ஹாசன் காட்ட தயாராக இருக்கிறாரா? என்று அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதே போல் எம்ஜிஆர் குறித்து சீமான் பேசியதற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
அமைச்சர் பேட்டி:
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கமல் குறித்து கேட்ட போது, “எனது சொத்துக் கணக்கு தொடர்பான வெள்ளை அறிக்கையினை நான் காட்ட தயாராக உள்ளேன். அதே போல் நடிகர் கமல்ஹாசன் தனது சொத்து குறித்த விவரத்தை தெரிவிப்பாரா??” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பே “நாம் தமிழர்” கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எம்ஜிஆர் குறித்தும் அவரது ஆட்சி குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார். எம்ஜிஆர் நல்லாட்சி புரியவில்லை என்றும் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சரிடம் கேட்ட போது, “எம்ஜிஆர் பற்றியும் அவரது ஆட்சி திறன் குறித்தும் பேசுவதற்கு சீமான் போன்றவர்களுக்கு அருகதை கிடையாது. தரத்துடன் பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். வீணே வெட்டியாக பேசுபவர்களிடம் எதற்கு பதில் தர வேண்டும். அது முறையும் இல்லை”
டிசம்பர் 28 ஆம் தேதி கனமழை வெளுத்து வாங்கும்!!
“எம்ஜிஆர் தமிழகத்தின் தெய்வமாக கருதப்படுகிறார். அவர் குறித்து தப்பாகவோ அல்லது பழித்தோ பேசினால் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்” இவ்வாறாக சீமான் பேசியதற்கு காட்டமாக பதில் கூறியுள்ளார்.