நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் பேரிடர் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அமைச்சர் ஒருவர் செய்த செயல் அனைவரையும் வியக்கவைத்துள்ளது.
கொரோனா பேரிடர்:
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் கடந்த இரு மாதங்களாகவே கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் தினசரி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் அனைத்து மாநிலத்திலும் சுகாதாரத்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் குவிந்து வருவதன் காரணமாக படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போராடி வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தற்போது மிசோரம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அமைச்சர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. லால்சிர்லியானா என்னும் அமைச்சர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் மட்டுமல்லாமல் அவரது மனைவி மற்றும் மகன் உட்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த மருத்துவமனையில் அமைச்சர் தரைகளை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அமைச்சர் கூறுகையில் நான் மருத்துவர்களுக்கு எந்த சங்கடமும் ஏற்படுத்தவில்லை. மேலும் அனைவருக்கும் நான் ஓர் உதாரணமாக இருக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.