மக்கள் தொகை வளர்ச்சியால் பால் தட்டுப்பாடு மாநிலங்கள் தோறும் உருவெடுத்து வருகிறது. எனவே இதை சரி செய்ய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பால் உற்பத்தியை அதிகரிக்க கேரளா மாநில அரசு புதிய நடவடிக்கை ஒன்றை கையாண்டுள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது கேரள போக்குவரத்து துறையுடன் இணைந்து “மில்மா ஆன் வீல்ஸ்” என்ற திட்டத்தை கேரள பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஜே.சிஞ்சுராணி நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் பால் பண்ணையாளர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு பால் லிட்டருக்கு ரூ.5 கூடுதலாக வழங்க உள்ளோம் என கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் 2023 இன்று தாக்கல் – நிர்மலா சீதாராமன் உரை!! Live Update!!
மேலும் பால் மூலம் தயாரிக்கப்படும் உற்பத்தி பொருட்களை செயலிழந்த பேருந்து மூலம் விற்பனை செய்து உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்க உள்ளோம். இதனால் பால் உற்பத்தியில் கேரள மாநிலம் தன்னிறைவு அடையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.