தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ 3 குறைக்கப்பட உள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
பால் விலை உயர்வு:
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளார். அவர் பதவி ஏற்றவுடன் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
முழு ஊரடங்கு குறித்து 2 நாட்களில் அறிவிப்பு – முதல்வர் தகவல்!!
அதில் முக்கியமாக பெண்களுக்கான இலவச பயணம் மற்றும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காரணமாக தமிழக மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி பசும்பால் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், எருமைப் பால் லிட்டருக்கு 6 ரூபாயும் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 28 ரூபாயில் இருந்து 32 ரூபாயாகவும், எருமைப்பாலின் கொள்முதல் விலை 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.