உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட், தங்கள் நிறுவனத்தில் இருந்து 10,000 ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
திடீர் பணி நீக்கம்:
சமீப காலமாக, பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகிறது. உற்பத்தி குறைவு, பொருளாதார ஏற்ற இறக்கம் உள்ளிட்ட பல காரணங்களை காட்டி தொடர்ந்து பல நிறுவனங்கள் இந்த அதிரடி செயலை செய்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டின், மூன்றாவது பணி நீக்க சுற்று அடிப்படையில் கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து பேசிய மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர், நிறுவனத்தின் மூத்த தயாரிப்பு மேலாளர் உட்பட பலர் வேலை இழந்ததாகவும், அவர்கள் அனைவரும் LinkedIn ல் வேறு வேலை தேடுவதாகவும் தெரிவித்தார்.
7 வது ஊதிய குழு., அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இனி ரூ. 40,000 வரை துட்டு கொட்ட போகுது!!
கிட்டத்தட்ட, இந்த ஊழியர்களின் பணி நீக்கத்தால் பல இந்தியர்கள் வேலை இழந்து நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.