கொரோனா தொற்று காரணமாக தனது அனைத்து ஊழியர்களுக்கும் தலா ரூ. 1,00,000 ரூபாய் போனசாக வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகையே தலைகீழாக திருப்பி போட்டுள்ளது கொரோனா வைரஸ் எனும் கொல்லுயிரி. பெரும்பாலான மக்கள் வேலையிழந்து உணவில்லாமல் தவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு நிறுவனங்களும் இந்த கொரோனாவால் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. உடல் அளவில் மட்டுமில்லாமல் மனதளவிலும் இந்த கொரோனா மற்றும் ஊரடங்கு சூழலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்படிப்பட்ட சூழலில் தன் ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்துமாறு மைக்ரோசாப்ட் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. அதாவது கொரோனா தொற்று போனஸ் என்ற பெயரில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் அனைத்து ஊழியர்களுக்கும் 1,500 டாலர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 1 லட்சம். மைக்ரோசாப்டின் உயர் அதிகாரி கேத்லீன் ஹோகன் இதை நேற்று அறிவித்துள்ளார். இதை அறிந்த அனைத்து மைக்ரோசாப்ட் ஊழியர்களும் படு குஷியில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்