ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான இறுதி போட்டிக்கு தகுதி பெற மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங்கை தேர்வு தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத் அணியின் விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்க்க, விருத்திமான் சாஹா 18 ரன்களில் வெளியேறினார். இவரை தொடர்ந்து, சாய் சுதர்சன் (43) மற்றும் சுப்மன் கில் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில், சுப்மன் கில் 60 பந்தில் 7 பவுண்டரி 10 சிக்ஸர் உட்பட 129 ரன்கள் குவித்து நடப்பு ஐபிஎல்லில் 3 சதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து, 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்களை குவித்தது. ஹர்திக் பாண்டியா 28* மற்றும் ரஷீத் கான் 5* ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
கடினமான இந்த இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவரில் 171 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியானது அபாரமாக வெற்றி பெற்றதுடன், தொடர்ந்து 2 வது முறையாக இறுதிப் போட்டிக்குள்ளும் நுழைந்து உள்ளது. நாளை CSK அணியை எதிர்த்து குஜராத் அணி சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் மோத உள்ளது.