
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட மெட்ரோ சேவையில் நாளுக்கு நாள் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அதன்படி முதல் கட்ட மெட்ரோ சேவை வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது 2ம் கட்ட மெட்ரோ அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது ஒரு புறம் இருந்தாலும் அவ்வப்போது மெட்ரோ நிர்வாகம் பயணிகளை வியக்க வைக்கும் வகையில் புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் தற்போது, இனி வார இறுதி நாட்களில் 100 ரூபாயில் அளவில்லா பயணம் வழங்குவதற்கான திட்டத்தை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது பயணிகள் ரூபாய் 150 கட்டணம் செலுத்தி ஒரு நாள் சுற்றுலா அட்டையை ரயில் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டையை வைத்து ஒரு நாள் முழுவதும் மெட்ரோவில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம். பின் இந்த அட்டையை ஒப்படைக்கும் போது 50 ரூபாய் மீண்டும் பயணிகளிடையே வழங்கப்படும். மேலும் இந்த சுற்றுலா அட்டை ஒரு நாள் மட்டுமே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.