வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக மழை பதிவாகியுள்ளது. தற்போது வங்கக் கடலில் காற்றின் வேகம் குறைந்து வருவதால் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்திருந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் இன்னும் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என கூறினர். இதைத்தொடர்ந்து அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இது காற்றழுத்த மண்டலமாக சுழன்று புயலாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு., இனி அப்லோட் செய்ய வேண்டாம்! அமலாகும் புதிய வழிமுறைகள்!!
இந்த காற்று தற்போது கிழக்கு திசை நோக்கி வீசப்படுவதால் தென்கிழக்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதியில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு வரும் டிசம்பர் 5ம் தேதி உருவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.