தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்தே சித்திரை வெயில் வெளுத்து வாங்கி வந்த நிலையில், அந்த சூட்டை தணிக்கும் விதமாக சில முக்கிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் சந்தோஷத்தில் மிதந்து வரும் நிலையில், சென்னை வானிலை மையம் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அதாவது தமிழகத்தில் மிக முக்கிய மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், காரைக்கால் புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை அறிந்த மக்கள் அனைவரும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.