இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் மெரிடித்தை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் முதன்முதலாக களமிறங்குகிறார் மெரிடித்.
மெரிடித்:
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கடந்த 18ம் தேதி அன்று சென்னையில் வைத்து நடந்தது. இதில் பல வீரர்கள் எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு ஏலம் போனார்கள். அந்த வரிசையில் ஆஸ்திரேலிய நாட்டின் இளம் வீரர் மெரிடித் ரூ.8 கோடிக்கு ஏலத்தில் போனார். இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இவர் சர்வதேச போட்டிகளில் இதுவரை களமிறங்கவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவர் பிபிஎல் டி 20 போட்டிகளில் தான் விளையாடி வந்தார். அந்த போட்டியில் தனது அசத்தலான பந்துவீச்சால் அனைவரின் கவனத்தையும் தன பக்கம் திருப்பினார். மேலும் இவர் விளையாடிய 34 போட்டிகளால் 43 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக இவர் பவர்பிளேவில் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்களை வீழ்த்துவதில் வல்லவராக திகழ்கிறார்.
பும்ராஹ்விற்கு மலையாள நடிகையுடன் திருமணமா?? குவியும் வாழ்த்துக்கள்!!!
இவரது இந்த ஆட்டத்தினால் பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. தற்போது இவர் முதன்முதலாக சர்வதேச டி20 போட்டிகளில் களமிறங்குகிறார். வெலிங்டனில் இன்று நடைபெறும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி 20 போட்டியில் இவர் தேர்வாகியுள்ளார். இதனால் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.