தற்போது எல்லாம் பொருட்கள் திருட்டை விட தகவல் திருட்டுகளே அதிகம் நிகழ்கின்றன. அந்த வகையில் உலகின் முன்னணி சொகுசு காராக விளங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாடிக்கையாளர்கள் சுமார் 1000 பேர் தகவல்கள் திருடப்பட்டு உள்ளது . இந்த தகவல் அந்த கார் வைத்திருக்கும் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருட்டு என்பது முன்பெல்லாம் நகை, பணம் ,பொருட்கள் என்றிருக்கும். ஆனால் இப்பொழுது அதற்கெல்லாம் மவுசு குறைந்து விட்டது போல, அவைகளை மிஞ்சி நிற்பது இந்த தகவல் திருட்டுகளே. அதாவது இதுபோன்ற திருட்டுகளை சமூக வலைத்தளங்களில் அதிகம் கேள்விபட்டு இருப்போம். ஒருவரின் பிரைவேட் கணக்கின் உள் சென்று அதை ஹக் செய்து அதன் வாயிலாக அவர்களின் புகைப்படங்கள் , தகவல்கள் போன்ற அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்கள்.
அந்த வகையில் , தற்போது உலகில் சொகுசு கார்கள் விற்பனை மற்றும் தயாரிப்பில் முன்னணியில் விளங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் தகவல்கள் பொது வெளியில் கசிந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது அந்த நிறுவனத்தில் உள்ள சுமார் ஒரு ஆயிரம் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி ,தொலைபேசி எண், மெயில் ஐடி, கிரெடிட் கார்டு போன்ற விவரங்கள் திருடப்பட்டு உள்ளது. இந்த தகவல்கள் அந்த கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்