கோல் மழை பொழிந்து அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா…, ஆசிய கோப்பையில் கெத்து காட்டி அசத்தல்!!

0
கோல் மழை பொழிந்து அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா..., ஆசிய கோப்பையில் கெத்து காட்டி அசத்தல்!!
கோல் மழை பொழிந்து அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா..., ஆசிய கோப்பையில் கெத்து காட்டி அசத்தல்!!

சலாலா மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த கடந்த மே 23ம் தேதி முதல் ஆடவருக்கான ஹாக்கி ஜூனியர் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், தலா 5 அணிகள் இரு குரூப்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் போல் போட்டியிட்டு வருகின்றனர். இந்த வகையில், இந்தியா, பாகிஸ்தான், சீன தைபே, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய 5 அணிகள் குரூப் A ல் இடம்பெற்றுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், இந்திய அணியானது சீன தைபே அணியை 18 கோல் வித்தியாசத்திலும், ஜப்பான் அணியை 2 கோல் வித்தியாசத்திலும் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. ஆனால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை மட்டும் 1-1 என டிரா செய்தது. இதையடுத்து, நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை இந்திய அணி எதிர்கொண்டது.

நடிகை சினேகாவின் மூத்த அண்ணனை பார்த்துள்ளீர்களா?? பாசப்பிணைப்புடன் எடுத்துக்கொண்ட அழகிய கிளிக்ஸ்!!

இதில், இந்திய அணி தொடர்ந்து கோல் மழை பொழிந்து தாய்லாந்து அணியை 17 கோல்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றிகள் மூலம், இந்திய அணி குரூப் A யில் 3 ல் வெற்றி 1ல் டிரா என 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி ஜப்பான் அணியை விழ்த்துமேயானால், பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது. குரூப் B யில், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதில் முன்னிலையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here