இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டவது அலை தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு அளிக்கும் வகையில் மீம் கிரியேட்டர்ஸ் இணையத்தில் தங்களது கைவண்ணத்தை தெரிவித்து வருகின்றனர்.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார் – சோகத்தில் இலக்கிய துறை!!!
மீம்ஸ்:
இந்தியா முழுவதும் சுமார் 15 மாத காலத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது. எனவே மக்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து மாநில அரசும் பல கட்டுப்பாடுகளை நடைமுறை படுத்தி வருகிறது. மேலும் சில மாநிலங்களில் முழு நேர ஊரடங்கும் விதிக்கப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த ஊரடங்கில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படி அரசு மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தற்போது இந்த பணியை மீம் கிரியேட்டர்ஸ்களும் செய்து வருகின்றனர். அதன்படி கொரோனா குறித்த விழுப்புணர்வு மக்களுக்கு ஏற்படும் வகையில் மீம் கிரியேர்ட்டர்ஸ் பல மீம்ஸ்களை இணையத்தில் வெளியீட்டு வருகின்றனர். அவை அனைத்தும் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.மேலும் அவை அனைத்தும் சமூக கருத்துக்களை உள்ளடக்கியும் இருக்கிறது.அந்த வகையில் தற்போது அனைவராலும் கவரப்பட்ட மீம்ஸ் என்றால் அது,’தனித்திரு..விலகியிரு..வீட்டில் அடங்கியிரு..இல்லாவிட்டால் தெய்வத்திரு’ என்னும் வாசகம் தான் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆக இருந்து வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதுமட்டுமல்லாமல் ஊரடங்கில் பொது மக்களுக்கு ஏற்படும் மனநிலையையும் அனைவரும் கவரும் வகையில் நகைச்சுவையாக தெரிவித்து வருகின்றனர் மீம் கிரியேட்டர்கள். அதேபோல் மாஸ்க் அணியாவிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அனைவரும் கவரும் வண்ணத்தில் தெரிவித்து வருகின்றனர் மீம் கிரியேட்டர்ஸ்.