தமிழ்நாட்டில் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க மாவட்டந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டம் புது சத்திரத்தில் உள்ள பாவை இன்ஜினியரிங் கல்லூரியில் பிப்ரவரி 18ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மெகா வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இம்முகாமில் 1ம் வகுப்பு முதல் பட்டதாரி, டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங் என அனைத்து கல்வி தகுதி உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் வேலை வழங்க உள்ளதால் வேலை பெற விரும்புபவர்கள் ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ், சுயவிவரம் போன்ற உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வேலை வேண்டி விண்ணப்பிப்பவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்யவும் வலியுறுத்தியுள்ளனர்.