பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீரா மிதுன். பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிடுவதால் தொடர்ந்து பல சிக்கல்களில் மாட்டியும் வந்தார். இந்நிலையில் தற்போது சூர்யா நடித்த சுரரை போற்று படத்தை பற்றி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் மீராவை கழுவி ஊற்றி வருகின்றனர்.
மீரா மிதுன்
மாடலிங் துறையில் இருந்த மீரா மிதுனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. இவர் வீட்டிற்கு வந்த முதல் நாளே பல சண்டைகள் ஏற்பட தான் செய்தது. இந்நிலையில் வெளியிலும் இவர் மேல் பல குற்றசாட்டுகள் போடப்பட்டது. இயக்குனர் சேரன் மீது தகாத பழியை போட்டதால் அந்த வீட்டை விட்டும் வெளியேறினார்.
வெளியே வந்த பிறகு தான் மீராவின் ஆட்டமே ஆரம்பமானது. சினிமா துறையில் இருந்த பலரையும் கேவலமாக பேசி விடியோவை வெளியிட்டார் மீரா மிதுன். உச்சகட்ட நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யாவையே கேவலமாக பேசினார். விஜய் தன் வளர்ச்சியை பார்த்து பொறாமை படுவதாகவும், தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் செய்ததாகவும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டார். அதிலும் சூர்யாவிற்கு சுத்தமாக நடிக்க வரவில்லை எனவும் அவரை கஷ்டப்பட்டு தான் நடிக்க வைக்கின்றனர் எனவும் கூறினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் கொந்தளித்த ரசிகர்கள் மீராவின் உருவப்படத்தை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் மீரா மிதுன் அடங்குவதாக இல்லை. தொடர்ந்து பல விடீயோக்களை வெளியிட தான் செய்தார். இதுக்கு வேற வேலை இல்லை என மக்களும் அப்படியே விட்டுவிட்டனர். அரசியலில் குதிக்க போவதாக வேறு கூறி வருகிறார். இந்நிலையில் அவர் மறுபடியும் சூர்யாவை வம்புக்கு இழுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
The movie is a very big utter flop, did @Suriya_offl pay you to write like this. Am here to say truth , it's a complete flop and loss and it's nowere as yu say mister @Anthanan_Offl Stop spreading false statements https://t.co/NqFi24CYjO https://t.co/CsGS8MpMMm
— Thamizh Selvi Mani (@meera_mitun) December 11, 2020
அதாவது ஒரு ரசிகர் கூகிளில் அதிகம் தேடப்பட்ட படத்தில் ‘சூரரை போற்று திரைப்படம் 2வது இடத்தை பிடித்துள்ளதாக என பதிவிட்டுள்ளார். அதற்கு மீரா மிதுன் பதிலளித்துள்ளார். அதாவது ‘சூரரை போற்று திரைப்படம் சுத்த பிளாப். பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய படம் அது. இப்படி எல்லாம் எழுத சூர்யா காசு கொடுத்தாரா??? இந்த மாதிரி தப்பான கருத்தை பரப்பாதீங்க.. என்று பி[பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் பலரும் காண்டில் உள்ளனர்.