ஆபாசமாக பேசிய வழக்கு: நீதிமன்றம் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு!!

0

கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் பதிவு செய்திருந்த வழக்கில் இருந்து எழும்பூர் நீதிமன்றம் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.

தொடர்ந்து சர்ச்சை பேச்சுக்களை பேசி ட்ரெண்டானவர் மீரா மிதுன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே இவர் தொடர்ந்து தேவையில்லாத கருத்துக்களை கூறிவந்தார். நடிகர் விஜய் மற்றும் சூர்யாவின் குடும்பத்தினரையும் தவறாக பேசி அனைவரின் கடுங்கோபத்திற்கு ஆளானார்.

ஆனால் அதோடு சும்மா இல்லாமல் பட்டியலின மக்களை பற்றி தவறாக பேசியதால் இவர் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டது. இதனால் போலீசார் பதிவு செய்த வழக்கில் கடந்த 14 ஆம் தேதி இவரையும் இவரின் ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை சிறையில் இருக்கும் மீரா மிதுனை ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அளித்த புகாரின் பேரில் மீண்டும் கைது செய்தனர் போலீசார். மேலும் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர் படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் பதிவாகியிருந்த வழக்குகளில் இருந்து மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. மேலும் இதற்கு முன்பு கைதான வழக்கில் இவருக்கு ஜாமின் அளிக்கப்படாததால் நீதிமன்றக் காவலில் தொடர்ந்து இருப்பார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here