6 மாசமா நடிகை மீனா இந்த நரக வேதனையை அனுபவிச்சுருக்காங்க – பிரபல நடிகர் உருக்கமான பேச்சு!!

0
மறுமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா..,
மறுமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா..,

நடிகர் மீனாவின் கணவர் வித்யாசாகர் அண்மையில் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த துயரமான பதிவு ஒன்றை நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.

பார்த்திபன் பேச்சு:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா. இவர் பிரபல தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக, இவரது கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்தார். பெங்களூரில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட இவர், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாரத விதமாக கடந்த 28ஆம் தேதி, திடீரென உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். தற்போது, நடிகை மீனா குறித்த முக்கிய பதிவு ஒன்றை நடிகர் பார்த்திபன் தெரிவித்து உள்ளார். அதாவது, மீனா ஒரு குழந்தை மாதிரி, அவர் வளர்ந்திருந்தாலும் அவரது பேச்சுக்களும் செயல்களும் குழந்தை மாதிரி தான் இருக்கும்.

அவருக்கு இப்படி ஒரு துயர நிலையா? என தெரிவித்தார். மேலும் கடந்த ஆறு மாதங்களாக வித்யாசாகர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இதனால் மீனா பயங்கர வேதனைகளை அனுபவித்ததாகவும் பதிவிட்டார். இவரும் நடிகை மீனாவும் வெற்றி கொடி கட்டு, பாரதி கண்ணம்மா, உன்னருகே நானிருந்தால் உள்ளிட்ட பல படங்களில்  இணைந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here