ரஞ்சி டிராபியில், சிறந்து விளங்கிய மும்பை வீரர்களுக்கு MCA சார்பாக விருதுகளை வழங்கியுள்ளது.
MCA விருதுகள்:
மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் (MCA) சார்பாக வருடம் தோறும், மும்பை அணிக்காக சிறந்து விளங்கும் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி வருகின்றன. இதன்படி, மும்பையில் உள்ள எம்சிஏ கிளப்பில் நேற்று இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் மூன்று வீரர்கள் மட்டும் அதிக விருதுகளை அள்ளி சென்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது, பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான் மற்றும் தவால் குல்கர்னி ஆகியோர் 2019-20 மற்றும் 2021-2022 ஆகிய ஆண்டுகளில் ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்பட்டதால் இவர்கள் மூவரும் அதிக விருதுகளை வென்றுள்ளனர். இதில், சர்ஃபராஸ் கான் கடந்த இரண்டு சீசனிலும் (928, 982) 900 ரன்களுக்கு மேல் எடுத்ததால், அதிக ரன்கள் எடுத்ததற்காக ஸ்ரீ எஸ்.வி. ராஜத்யக்சா டிராபி, தத்து பட்கர் விருது மற்றும் அதிவேக சதத்திற்கான சிறப்பு விருது என குவித்துள்ளார்.
U19 மகளிர் T20WC.., இந்திய அணிக்கு கேப்டனாக ஷாபாலி வர்மா தேர்வு.., அனல் பறக்கும் முதல் ஆட்டம்!!
இவரை போன்று, பிரித்வி ஷா 9 விருதுகளையும், மும்பையின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி 7 விருதை வாங்கி உள்ளனர். இதில், தவால் குல்கர்னி 2017-2018 ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரருக்கான விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அங்கீகாரத்திற்கு மிக்க நன்றி என பதிவிட்டு உள்ளனர்.