உலகெங்கும் கடினமாக உழைக்கும் தொழிலாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 1ம் தேதி உலக தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் நலன் கருதி மருத்துவ காப்பீடு, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் கழிவுநீர் அகற்றுதல், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார்.
தீவிரவாதத்தை தூண்டிய 14 செல்போன் செயலிகளுக்கு தடை.., மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!
அதாவது மாநிலத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் துப்புரவு பணியாளர்களுக்கு மே தின பரிசாக ஊதியத்தில் ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தெலுங்கானாவில் 1,06,474 தொழிலாளர்கள் பயன்பெற உள்ளதால் பலரும் அம்மாநில முதல்வருக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.