தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மிக அதிகமாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு வருகிற மே மாதம் 1 மற்றும் 2ம் தேதிகளில் முழு ஊரடங்கை விதிக்க பரிந்துரை செய்துள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்களை தொடர்ந்து கடைபிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தும் தமிழகத்தில் தொற்றினால் பாதிப்படைந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்று கிழமை பொதுமுடக்கம் மற்றும் இரவு நேர ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரடங்கின் பொழுது அத்யாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு ஓர் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி வருகிற மே மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது.
‘கண்டிப்பாக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படமாட்டாது’ – திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி!!
மேலும் மக்கள் கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க மட்டுமே இதனை பரிந்துரை செய்துள்ளதாகவும், மக்களை பாதிக்காத வகையில் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான முறையான அறிவிப்பு வருகிற ஏப்ரல் 28ல் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசிடம் சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.