லாரி வாடகையை கண்டித்து தீப்பட்டி ஆலைகள் ஸ்ட்ரைக் – மார்ச் 22 முதல் போராட்டம்!!

0

தமிழகத்தில் அனைத்து தரப்பு விலை வாசியும் சற்று உயர்ந்து வரும் நிலையில் மார்ச் 22ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீப்பட்டி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தீப்பட்டி ஆலைகள்:

தமிழகத்தில் கடந்த மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் அதிகரித்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் சுமார் கடந்த 20 நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் கடந்த மாதம் இதன் விலை அதிகரித்த நிலையில் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் நஷ்டமடையாமல் இருப்பதற்கு லாரி வாடகை கட்டணத்தை அதிகரித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

இதனால் பல்வேறு பொருட்களின் விலையும் சற்று அதிகரித்தது. இதனால் அதிகமாக பொதுமக்கள் பாதிப்படைந்தனர். இந்நிலையில் தீப்பட்டி ஆலையில் பணிபுரியும் ஊழியர்களும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகேவ லாரி வாடகை அதிகரிப்பு மற்றும் தீப்பட்டி மூலப்பொருட்களின் விலையேற்றம் என அவர்கள் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இதனை கண்டித்து தீப்பட்டி ஆலைகள் வருகிற 22ம் தேதி முதல் 10 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here