ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சில காரணங்களாக நியூசிலாந்து மற்றும் ஜிம்பாவைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்போ நடக்க போவது என்ன?
ஆஸ்திரேலியா அணி தற்போது ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக இரண்டு தொடர்களிலும் இருந்து உடனடியாக விலகியுள்ளார். அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலீஷ் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் மார்ஷல் காயம் காரணமாக தான் விலகியுள்ளார் என ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கூறியுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆனால் அந்த காரணம் உண்மை இல்லை என்று தான் தெரிகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியா அடுத்ததாக இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்துவதற்காக தான் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனை தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக பயிற்சி மேற்கொள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான் இந்த இரு ஒருநாள் தொடர்களிலும் இருந்து வெளியாகி உள்ளாராம்.
அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை மனதில் வைத்து தான் இவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அணி கடந்த வருடம் T20 உலக கோப்பையில் முதல் முறையாக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு உலக கோப்பை அவர்களது சொந்த மண்ணிலே நடைபெறுவதால் மற்ற அணிகளை வீழ்த்துவதற்கு சிறந்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பயிற்சி அனைத்தும் இந்திய அணி முறியடிக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.