இருமணங்கள் இணையும் திருமணம் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது என்று அனைவரும் சொல்வது வழக்கம். அதன்படி அந்த திருமணத்தை நடத்த ஜாதகம், சம்பிரதாயம் போன்ற பல சடங்குகள் உள்ளன. இப்படி பல சடங்குகளை தாண்டி சொந்தங்கள் சேர்ந்து நடத்தும் திருமணம் முடிந்த பிறகும் பல சம்பிரதாயங்களை இருப்பதாக சொல்லப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி பல சடங்குகளை தாண்டி சொந்தங்கள் சேர்ந்து நடத்தும் திருமணம் முடிந்த பிறகும் பல சம்பிரதாயங்களை இருப்பதாக நம் முன்னோர்கள் வழிவகுத்து சென்றுள்ளனர். ஆனால் இதை சிலர் அறியாமையால் கடைபிடிக்க தவறிவிடுகின்றனர். இன்னும் சிலர் இது குறித்து தெளிவான விளக்கம் கிடைக்காமல் தவிக்கின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் திருமணம் முடிந்த கையோடு செய்ய கூடாத சில சம்பிரதாயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 6 மாதத்திற்கு மணமக்களும், அவர்களின் பெற்றோர்களும் ராமேஸ்வரம், காசி போன்ற புனித தளத்திற்கு யாத்திரைகள் செல்ல கூடாதாம். மேலும் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழாவும் நடத்த கூடாதாம். அதே போன்று திருமண நடந்த ஆறு மாதத்திற்குள் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி குடி போகக்கூடாதாம்.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் இது போன்ற சம்பிரதாயம் நடந்து விட்டால் குடும்பத்தில் பிரச்சனை, தீராத உடல் நல குறைவு, பண கஷ்டம் போன்றவை ஏற்படுமாம். இதனால் இதை சரி செய்ய சில பரிகாரங்களையும் நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமணம் முடிந்த கையோடு புனித தலத்திற்கு சென்றால், வீட்டில் உள்ளவர்கள் புதன் கிழமைகளில் கோவிலுக்கு சென்று அங்கு 5 மண் விளக்கு வாங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பக்தர்களுக்கு வெண்பொங்கலை பிரசாதமாக வழங்க வேண்டும். இப்படி 5 வாரங்கள் தொடர்ந்து செய்தால் போதும்.
குட் நியூஸ் மக்களே.., அதிரடியாக குறைந்த சிலிண்டரின் விலை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
அதே போன்று திருமணம் முடிந்த பின்பு குழந்தைக்கு மொட்டை அடித்தால், ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று தொடர்ந்து 11 நாட்கள் குழந்தைக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை குழந்தையின் தலையில் வைக்க வேண்டும்.
இது மட்டுமல்லாமல் திருமணம் முடிந்த கையோடு புதுமனை புகுவிழா நடத்தியிருந்தால் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து 9 வாரங்கள் நெய் தீபம் ஏற்றி முருகனை வழிபட்டால் வரவிருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் பனிபோல் நீங்கும்.