தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் விஷால், படங்களை தயாரிக்க பிரபல பைனான்சியர் அன்புச் செழியனிடம் சுமார் 21 கோடி கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்ட நிலையில், விஷால் கடனை திரும்ப கொடுக்கும் வரை விஷால் தயாரிக்கும் உரிமைகளை லைக்காவுக்கு தர வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன்பின் விஷால் பிலிம் பேக்டரி தயாரித்த ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் உரிமைகளை லைக்காவுக்கு தரவில்லை. அதனால், லைக்கா நிறுவனம் விஷால் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெளியாக இருக்கும் “மார்க் ஆண்டனி” படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால் வருகிற செப்டம்பர் 12-ல் விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் லைக்காவுக்கு தரவேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் தற்போது வரை ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தாததால் உயர்நீதிமன்றத்தில் லைக்கா முறையிட்டுள்ளது.
இந்தியா வருகை தரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்., அதிரடி முடிவு எடுத்த மத்திய அரசு!! பின்னணி என்ன?