
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஒரு படத்தை தயாரிக்க பிரபல பைனான்சியர் அன்புச் செழியனிடம் கிட்டத்தட்ட 21 கோடி கடன் வாங்கியிருந்த நிலையில் அந்த கடனை லைகா நிறுவனம் ஏற்று அடைத்து விஷாலுடன் ஒப்பந்தம் போட்டு கொண்டனர். அதன்படி கடனை திரும்ப கொடுக்கும் வரை விஷால் தயாரிக்கும் உரிமைகளை லைக்காவுக்கு தர வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் விஷால் பிலிம் பேக்டரி தயாரித்த ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் உரிமைகளை லைக்காவுக்கு தரவில்லை. அதனால், அந்த நிறுவனம் விஷால் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெளியாக இருக்கும் “மார்க் ஆண்டனி” படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
விஷாலை ஆஜராக சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று நடந்த வழக்கில் ஆஜரான விஷாலுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர். ”ஜி.எஸ்.டி., வரியாக 90 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு விட்டது; ‘சக்ரா’ படத்தின் ஓ.டி.டி., சாட்டிலைட் உரிமை லைகா நிறுவனத்திடம் உள்ளது. ஜி.எஸ்.டி.,யை லைகா செலுத்தாததால் விஷால் செலுத்தினார் என்று வாதாடினார். இதை ஏற்ற நீதிமன்றம் இந்த வழக்கை செப்டம்பர் 19ம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டது.