டோக்கியோ பாராலிம்பிக் – தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாரியப்பன்.. வெள்ளி பதக்கம் வென்று அசத்தல்!!

0

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் உயர் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் தமிழ்நாடு வீரர் மாரியப்பன். தற்போது இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தற்போது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் உயரம் தாண்டுதல் (டி63) போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு கலந்துகொண்டார். இப்போட்டியில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார் மாரியப்பன்.

இது மாரியப்பன்னின் 2வது பாராலிம்பிக்  பதக்கம் ஆகும்.இதற்கு முன்பு கடந்த 2015 ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் (டி63) தங்கவேலு மாரியப்பன் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து இந்த வருடம் நடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

 

மற்றொரு இந்திய வீரர் சரத்குமார், உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன.தற்போது வரை  டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இதுவரை 10 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here