சத்தீஸ்கர் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மதுரையை சேர்ந்த வீரர் ஒருவர் பலியானார். இதனால் இவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சத்தீஸ்கர்:
இந்திய எல்லையில் அனைத்து பகுதிகளிலும் தீவிரவாதிகள் தாக்குதல் போன்ற பதட்டமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இதனால் அனைத்து எல்லை பகுதியிலும் வீரர்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அதன் ஒரு பகுதியான சத்திஸ்கர் பகுதியில் வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவர்கள் கண்ணி வெடி மூலம் பலத்த தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்தோ திபெத் எல்லை பகுதியில் பாதுகாப்பு படையில் பணியாற்றிய வீரர் ஒருவர் மரணமடைந்தார். இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் பெயர் பாலுசாமி. இவர் மதுரையில் உள்ள பொய்க்கரைப்பட்டியை சேர்ந்த லக்ஷ்மணின் மூன்றாவது மகன் ஆவார்.
ஏப்.1 முதல் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் – தமிழக முதல்வர் அதிரடி!!
இவர் 14 ஆண்டுகளாக இந்தோ எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியை ஆற்றியுள்ளார். 31 வயதான பாலுசாமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. மேலும் இவருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளது. தற்போது இவரது மரணத்தினால் இவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.