நீரில் மூழ்கி பிரபல பாடகர் பலி…!சுற்றுலா சென்ற இடத்தில் அரங்கேறிய துயர சம்பவம்!!!

0

பஞ்சாபி மொழியில் பிரபல பாடகராக விளங்குபவர் மன்மீத் சிங். இவர் தன் நண்பர்களுடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போது அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் அவரை பிணமாக கரேரி ஆற்றுப் பகுதியில் மீட்டெடுத்து உள்ளனர்.

சுபி பாடல்களை பாடி புகழ் அடைந்தவர் பாடகர் மன்மீத் சிங். மேலும் அந்த பாடலுக்கு மிக பிரபலமான செய்ன் பிரதர் இசைக்குழுவிலும் இவர் இடம் பெற்று இருந்தார். பாடகர் மன்மீத் சிங் தன் நண்பர்கள் சிலருடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு சுற்றுலா சென்று உள்ளார். அங்கு அவர் கரேரி என்ற ஆற்று பகுதிக்கு சென்றிருந்த போது மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் அந்த ஆற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த வெள்ளப்பெருக்கை ஆற்றின் கரையோரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பாடகர் மன்மீத் சிங், திடீரென மழை நீரால் கால் வழுக்கி ஆற்றில் தவறி விழுந்து உள்ளார். இதையடுத்து அவர் அந்த ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உள்ளார். அதை பார்த்த அவரின் நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்துஉள்ளனர். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்தை அடுத்து, அவர்களின்  தீவிர தேடுதலுக்கு பிறகு மன்மீத் சிங் பிணமாக  கங்க்ரா மாவட்டத்தின் ஆற்றங்கரை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டார். சுற்றுலா சென்ற இடத்தில் பாடகர் மன்மீத் சிங் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் பஞ்சாப் திரை உலகில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here