மணிப்பூரில் இரு இனத்தவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறி 4 மாதங்கள் கடந்த நிலையிலும், இன்றளவும் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இந்த கலவரத்தால் 4,786 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 175 பேர் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் விவரம் தெரிவித்துள்ளனர். மேலும் 1,108 பேர் காயமுற்றதாகவும், 386 வழிபாட்டுத்தலங்கள் சேதம் ஆகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில் மணிப்பூரில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4 முதல் ரூ.7 லட்சம் வரையிலும், கூட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
இனி ரேஷன் பொருட்களை பெற இதை கட்டாயம் செஞ்சே ஆகணும்…, வெளியான முக்கிய தகவல்!!