30 ஆண்டுகளுக்கு மேலாக கற்களை மட்டுமே உண்டு வாழும் மனிதர் – மஹாராஷ்டிராவில் விசித்திரம்!!

0

உலகில் பல விசித்திரமான மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக கற்களை மட்டுமே உண்டு வாழ்ந்து வருகிறார். வயிற்றுவலி காரணமாக இவர் கற்களை சாப்பிட பழகி கொண்டார் என்பது மேலும் ஆச்சர்யத்தை விளைவிக்கிறது.

பல வித உணவுகள்

உலகில் பல விதமான மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். பலரை ஈர்க்க பல விசித்திரமான காரியங்களை சிலர் செய்வர். ஆனால், அப்படி இல்லாமல் தனது வயற்றுவலிக்காக ஒருவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கற்களை சாப்பிட்டு வாழ்ந்து வந்து கொண்டு இருக்கிறார். இது பலரையும் ஆச்சிரியம் அடைய வைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாத்ரா மாவட்டத்திலுள்ள ஆதர்கி குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்தாஸ் போத்கே. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கடுமையான வயிற்றுவலியால் அவதிபட்டுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்பு – பிரதமர் மோடி வாழ்த்து!!

 

வயிற்றுவலி போக பல மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளார். ஆனால், எதுவுமே இவருக்கு சரிப்பட்டு வரவில்லையாம். இதனை அடுத்து அவருக்கு ஒரு பெண் வயிற்றுவலி போக கற்களை சாப்பிட பரிந்துரை செய்துள்ளார். இதனை அடுத்து வயிற்றுவலி போக இவர் கற்களை சாப்பிட பழகியுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவர் கற்களை சாப்பிட்டதும் இவரது வயிற்றுவலி மாயமாய் மறைந்துள்ளது. இதனால் இதனையே தனது பழக்கமாக மாற்றியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரது குடும்பத்தினர் இவர் கற்களை சாப்பிடுவதை தடுக்க பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனராம். இதன் காரணமாக, ராம்தாஸ் அவர்களுக்கு தெரியாமல் கற்களை சாப்பிடுகிறாராம். இது ஒரு மனநோயாக கூட இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நமது முன்னோர்கள் கூறுவது போலவே, கற்களை சாப்பிட்டால் கூட இந்த உடல் கரைத்து விடுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here