இந்திய வனப்பணி (IFS) அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஒரு நபர் சுமார் 7 அடி நீளமுள்ள ராஜநாகத்தை எவ்வித பயமும் இல்லாமல் குளிப்பாட்டுவது அனைவரையும் ஆச்சரியத்திற்குள் மூழ்கடித்து உள்ளது.
ராஜநாகம் குளியல்:
‘பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்’ என்கிற ஒரு பழமொழியே விஷப்பாம்புகள் எவ்வளவு ஆபத்தானது என்பதை விளக்கிவிடும். அதிலும் உலகில் கொடிய விஷமுள்ள பாம்புகளில் டாப் லிஸ்டில் இருக்கும் ராஜநாகத்தை பார்த்தால் அனைவரும் தலைதெறிக்க ஓடுவார்கள். ஆனால் ஒரு நபர் சுமார் 7 அடி நீளமுள்ள ராஜநாக பாம்புடன் இயல்பாக பழகுகிறார். 55 வினாடிகள் ஓடும் இந்த வீடீயோவை இந்திய வனத்துறை அதிகாரி சுதாந்த நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் 7 அடி நீளமுள்ள ராஜநாகத்தை ஒரு நபர் வாளியில் தண்ணீர் பிடித்து அதன் மீது ஊற்றி குளிப்பாட்டுகிறார். அந்த நாகமும் எவ்வித சீற்றத்தையும் காட்டாமல் சாந்தமாக இருக்கிறது. படமெடுத்து நிற்கும் அந்த பாம்பை தட்டிக்கொடுக்கும் அவர் மீண்டும் ஒரு வாலி நீரை அள்ளி ஊத்துகிறார். இந்த விடீயோ தற்போது வைரலாகி உள்ளது..
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |