புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும் என அனைத்து இடங்களில் விளம்பரங்கள் வைக்கப்பட்டாலும் அதை புகைபிடிப்பவர்கள் அலட்சியப் படுத்துகின்றனர். மேலும் இந்த பழக்கத்தால் நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொது இடங்கள், விமானங்கள், ரயில்களில் பயணிக்கும் போது புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தடையை மீறி பெங்களூருக்கு ஆகாச ஏர் விமானத்தில் வந்த 56 வயது நபர்,பீடி அடித்துள்ளார்.
இதனால் சக விமானப் பயணிகள் புகார் அளிக்க, அந்த நபர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பின் விசாரணைக்கு பிறகு போலீசார் கூறுகையில் அந்த நபர் ராஜஸ்தான் மார்வார் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்றும், விமானத்தின் கழிவறையில் புகைபிடித்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.