நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து கடைசியாக வெளியாக இருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. வெற்றிப் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதில் ஸ்வாரசியம் என்னவென்றால், ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஒரு பாடலைப் பாடி இருக்கிறார். இந்த தகவலை இயக்குனர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, இந்த பாடல் முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தின் கதாப்பாத்திரங்கள்….,படக்குழு அறிவிப்பு….,
இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படத்திற்காக நடிகர் வடிவேலு பாடிய பாடலை மே 19 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இந்த பாடல் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.