சென்னையில் சமீபத்தில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் பல்வேறு முக்கிய கருத்துக்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து வரும் ஜனவரி 30, 31ம் தேதிகளில் புதுச்சேரி மாநிலத்தில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இம்மாநாட்டில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் நிகழ உள்ளதால் சர்வதேச நாடு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருகிறது. அதே போன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலைகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாய்கள் வளர்க்க இதான் கட்டுப்பாடு.., மாநகராட்சி அறிவிப்பு!!!
இந்நிலையில் பிரதிநிதிகள் மாநாடு முடிந்து வரும் வழியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தை பார்வையிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.