டிக்டாக் பற்றி பேச்சால் விமர்சனத்துக்கு ஆளான மாளவிகா மோகனன்..!

0

இந்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளை தடை செய்தது. இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் டிக்டாக் பற்றி வெளியிட்ட ட்வீட்டால் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன்..!

ரஜினியின் பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அடிக்கடி கவர்ச்சியான படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் மாளவிகா மோகனன் ஏதாவது சர்ச்சையில் சிக்கி ரசிகர்களிடம் மாட்டிக்கொள்கிறார்.

டிக்டாக் பற்றி ட்வீட்..!

இந்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் டிக்டாக் உள்ளிட்ட 59 மொபைல் ஆப்களை தடை செய்தது. இந்த சூழ்நிலையில் இதுவரை டிக்டாக்கில் மூழ்கியிருந்தவர்கள் இனி அதைவிடக் கொஞ்சம் குறைந்த அளவு மோசமான ஆப்-ஐத் தேடிச் செல்வார்கள் என டிக்டாக் தடை பற்றி மாளவிகா மோகனன் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்தப் ட்வீட்டை பார்த்து டிக்டாக் பயனர்கள் கோபமாகி மாளவிகாவை பதிலுக்கு பழி வாங்கும் வகையில் அவரது நடிப்பை விமர்சித்தும், அவரது ஹாட் போட்டோஷூட்கள் பற்றியும் அவர்கள் கமெண்ட்களை வெளியிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here