மலேஷிய பிரதமர் முகைதீன் யாசின் திடிரென்று தற்போது ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை இழந்ததை தொடர்ந்து முகைதீன் யாசின் ராஜினாமா செய்துள்ளார்.
கொரோனா முதல் அலையின் போதே கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் மலேசியாவும் ஒன்று. கொரோனாவிற்கு பிறகும் அங்கு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் யாசின் தலைமயிலான அரசாங்கத்தின் மேல் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
மேலும் தன்னுடைய ஒப்புதல் இன்றி பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டங்களை அரசு திரும்ப பெற்றுவிட்டதாக விட்டதாகவும் மலேஷிய மாமன்னரே அதிருப்தி தெரிவித்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கூட்டணி கட்சிகள் 15 பேர் யாசின் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றுவிட்டன.
எனவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை இழந்ததையடுத்து மலேசிய பிரதமர் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை யாசின் மன்னரிடம் வழங்கி உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்