மப்பு தலைக்கேறி காரை தறிகெட்டு ஓட்டிய சீரியல் நடிகை – விரட்டி பிடித்து கைது செய்த காவல்துறை!!

0
16 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி கொடுத்த 90ஸ் கனவு நாயகி., அடேங்கப்பா.., இப்போ வரைக்கும் அப்படியே இருக்கீங்களே!!

மலையாளத்தை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை அஸ்வதி பாபு, தனது காதலருடன் மது போதையில் காரை தறிகெட்டு ஒட்டிய வழக்கில், காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

கைது நடவடிக்கை:

மலையாள திரையுலகின் முன்னணி, சின்னத்திரை நடிகையாக திகழ்பவர் அஸ்வதி பாபு. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு, இளம் பெண்களை  விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த இவர், தற்போது காதலன் நவுபல் என்பவருடன் மதுபோதையில்  தனது காரை கண்ணா பின்னாவென ஓட்டியுள்ளார்.

அதிவேகமாக சென்ற இவர்களது கார், கொச்சி அருகே உள்ள தடுப்பு சுவர் ஒன்றில் மோதி அங்கிருந்த பைக் மற்றும் கார் மீது உரசியபடி  சென்றுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சினிமா பாணியில் காவல்துறையினர், இவர்களது காரை மடக்கி பிடித்து நிறுத்தியுள்ளனர்.

காரிலிருந்து இறங்கி ஓடிய இவர்களை, பக்கத்தில் இருந்த கடையில் வைத்து கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். மது போதையில் இவர்கள் இருவரும் இவ்வாறு செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரபல நடிகை 2வது முறையாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மலையாளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here