விரைவில் மின்னல் முரளி படத்தின் 2ம் பாகம் – இயக்குனர் விளக்கத்தால் குஷியில் ரசிகர்கள்!!

0

மலையாள திரையுலகில் புகழ்பெற்ற திரைப்படமாக விளங்கிய மின்னல் முரளி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக வாய்ப்புகள் இருப்பதாக அந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மின்னல் முரளி 2 :

கடந்த ஆண்டு,  டிசம்பர் 16ம் தேதி  மலையாளத்தில் வெளிவந்த மின்னல் முரளி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகிய இருவரும் சூப்பர் மேன் பவர் கொண்டவர்களாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றனர். டீ மாஸ்டரும், டெய்லரும் சூப்பர் மேன் பவர் பெற்றால், எப்படி இருக்கும் என்கின்ற கற்பனையே இந்த படத்தின் திரைக்கதை. இந்த படத்தை இயக்குனர் பஷில் ஜோசப் என்பவர் இயக்கியிருந்தார்.

சமீபத்தில், ஒரு பேட்டியின்போது இந்த படத்தின் டிரெய்லரில் பயன்படுத்திய பின்னணி இசையை ஏன் இந்த படத்தில் பயன்படுத்தவில்லை என்ற நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர், ஒரே படத்தில் அனைத்தையும் பயன்படுத்தி விட்டால், நன்றாக இருக்காது எனவும், இந்த படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் அதில் இந்த இசையை  நிச்சயமாக பயன்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதற்கான சாத்தியம் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து வருவதாகவும், சாத்தியம் இருந்தால் நிச்சயம் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here