மலையாள திரையுலகில், புகழ்பெற்ற நடிகையான மஞ்சு வாரியாரை கந்துவட்டிக்காரர்கள் சிலர் கடத்தி சென்று விட்டதாகவும், இதனை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் பிரபல இயக்குனர் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் பதிவு:
மலையாள திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் மஞ்சு வாரியார். இவர் தமிழில், அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். தற்போது ஒரு சில, மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியர் குறித்து பிரபல மலையாள இயக்குனர் சணல் குமார் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, மஞ்சு வாரியரை கந்துவட்டி காரர்களால் சிலர் கடத்திச் சென்று சில கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்றும், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் சோசியல் மீடியாவில் கடந்த 4 நாட்களுக்கு முன் பதிவிட்டார். தற்போது வரை, இதுகுறித்து யாரும் கண்டுகொள்ளவே இல்லை. மலையாள திரையுலகில் பெண்களுக்கான முக்கிய அமைப்பாக செயல்படும் Women in Cinema Collective என்ற அமைப்பிற்கு நான் மின்னஞ்சல் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. பிரபல நடிகை கடத்தப்பட்டதன் மீதான இந்த கவனக்குறைவு, மலையாள திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
— Sanal Kumar Sasidharan (@sanalsasidharan) May 1, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்