சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி), காலத்திற்கு ஏற்ப பல விதிகளை புகுத்தியும், புதுப்பித்து வருகின்றன. இந்த வகையில், கொண்டு வரப்பட்டது தான் ‘SOFT SIGNAL’ விதி. இந்த விதியின் படி, மைதானத்தில் வீரர்கள் அவுட்டானால், அதனை 3வது (ஆன்-பீல்ட் நடுவர்) அம்பயரின் முடிவை பெறுவதற்கு முன்னரே களத்தில் உள்ள 2 நடுவர்கள் அவுட் கொடுக்கலாம்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்கு பல வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த ‘SOFT SIGNAL’ விதியை தற்போது ஐசிசி நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், கள நடுவர்கள் எந்த முடிவும் எடுப்பதற்கு முன்னர் ஆன்-பீல்ட் நடுவருடன் ஆலோசனை செய்வார்கள். இதனை தொடர்ந்து, ஐசிசியானது மேலும் 2 விதியில் மாற்றி அமைத்துள்ளது.
TNUSRB SI பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா?? உங்களுக்கான முக்கிய செய்தி இதோ!!
அதாவது, பில்டிங் செய்யும் போது அதிக ஆபத்துள்ள இடங்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இதில், பேட்டர்கள் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது, விக்கெட் கீப்பர்கள் ஸ்டம்புகளுக்கு அருகில் நிற்கும் போது, மற்றும் பீல்டர்கள் அருகில் இருக்கும் போது விக்கெட்டுக்கு முன்னால் பேட்டர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். அடுத்ததாக, ஃப்ரீ ஹிட்டில் அடித்த ரன், ஸ்டம்பை தாக்கும் போது, ப்ரீ ஹிட்டில் அடித்த ரன்களாகக் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதி முதல் சர்வதேச அளவிலான போட்டிகளில் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.