பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை அனைத்தும் உயர்த்தப்படுவதாக மகாராஷ்டிரா முதல்வர், ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு:
பள்ளி மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தின், 2023-24 ஆம் தேதி ஆண்டிற்கான முதல் பட்ஜெட்டை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், மாநில நிதி அமைச்சரான தேவேந்திர பட்னாவிஸ் இன்று தாக்கல் செய்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி 5 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வி உதவித்தொகை ரூ.5000 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து 8 முதல் 10ம் வகுப்பு மாணவர்களின் உதவித்தொகை ரூ.1500 முதல் 7500 வரை உயர்த்தப்படுவதாக தெரிவித்தார்.
இதுபோக, 8ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்படும் எனவும் தன் உரையில் குறிப்பிட்டார். இது போக சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை ரூபாய் 25000 வரை உயர்த்தப்படுவதாக தெரிவித்தார்.