கல்லூரியில் சேர விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் அனைவருக்கும், வாக்காளர் பதிவு அவசியம் என மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஒருவர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு :
தீபாவளி, மழை வெள்ளம் போன்ற தொடர் விடுமுறைகளுக்குப் பின், கல்வி நிறுவனங்கள் தற்போது வழக்கம் போல் தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் மாநிலத்தில் உள்ள அமைச்சர் ஒருவர், கல்லூரி மாணவர்களின் அட்மிஷன் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதாவது, 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் புதிதாக கல்லூரியில் அட்மிஷன் போடும் போது, அவர்களுக்கு வாக்காளர் பதிவு அவசியம் என்ற உத்தரவை மாநில அரசு விரைவில் பிறப்பிக்கும் என்று தெரிவித்தார்.
கொரோனா அப்டேட்.., ஒரே நாளில் இத்தனை பேர் பாதிப்பா?? சுகாதாரத்துறை தகவல்!!
மாணவர்களிடம் வாக்களிப்பது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளதாக அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் படி, வேளாண் சம்பந்தப்பட்ட 4 ஆண்டு பட்டப்படிப்பை அடுத்த ஆண்டு ஜூன் முதல் அரசு கொண்டு வர உள்ளதாக அறிவித்தார்.