சமீபத்தில் திரைப்பட அதிபர் ரவீந்திரனை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி. இவர்களது காதல் திருமணம் அப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி மீம் டெம்ப்லேட் ஆக கூட மாறி இருந்தது. இப்படி, சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த இந்த காதல் ஜோடி விவாகரத்து செய்ய இருப்பதாக சில தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
அதாவது, தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஒரு சோகமான கருத்தையும் பகிர்ந்தார். இந்த தகவலை கண்ட ரசிகர்கள் மகாலட்சுமி மற்றும் ரவீந்திரனுக்கு இடையில் சண்டை ஏற்பட்டதாகவும், அதனால் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தங்களது சந்தேகங்களை எழுப்பினார்கள்.
மே 30 இல் வெளியாகும் ‘ரெஜினா’…,படக்குழு அறிவிப்பு….,
இந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த நடிகை மகாலட்சுமி, ‘யூடியூப் சேனல்களுக்கு எனது மைண்ட் வாய்ஸ். இன்னுமா நாங்கள் ட்ரெண்ட். எங்களுக்கு இல்லையா ஒரு எண்டு. எனக்கும் ரவீந்திரனுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.