தமிழ்நாட்டில் சில்லறை விற்பனையில் தொடங்கி மிகப்பிரமாண்டமாக ஜவுளி, தங்கம், காய்கறி என அனைத்து துறைகளிலும் கொடிகட்டி பறக்கிறது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம். தற்போது இந்த நிறுவனம் பெரு நகரங்களில் கிளைகளை தொடங்கிய வண்ணம் உள்ளனர். இதையடுத்து கடந்த டிசம்பர் 5ம் தேதி மதுரையில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் திறக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது மதுரையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மாட்டுத்தாவணியில் கட்டிட வேலைகள் முழுமையாக முடியாத நிலையில் துவங்கப்பட்டுள்ளது. மேலும் லேக் ஏரியாவில் கட்டிடம் அமைந்துள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு வசதி மோசமான நிலையில் உள்ளதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மத்திய அரசின் 11,409 காலிப் பணியிடம் அறிவிப்பு.., தேர்வு முறையை மாற்றியதால் தேர்வர்கள் மகிழ்ச்சி!!!
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் முழுமையாக கட்டிட பணிகள் முடிவடையாமல் உயர் அதிகாரிகள் அனுமதி அளித்ததற்கான காரணங்களை விளக்க கூறியுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர், தீயணைப்பு துறை, நகர திட்டமிடல் போன்ற உயர்மட்ட அதிகாரிகளின் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை பிப்ரவரி 6ம் தேதி ஒத்தி வைத்தனர்.