மதுரை அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் செய்த சாதனை குறித்து முக்கிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கின்னஸ் சாதனை:
பொதுவாக மனிதர்களாக பிறந்த எல்லோருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணுவது இயல்பு தான். ஆனால் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே உலக சாதனை படைத்து வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் மதுரையை சேர்ந்த வயதான பெரியவர் ஒரு சாதனையை செய்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது மதுரையில் இருக்கும் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் தான் அந்தோணி விக்டர். இவர் தனது காது பகுதியில் இருக்கும் முடியை நீளமாக வளர்த்துள்ளார். குறிப்பாக கடந்த 2007 இருந்தே இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அதுமட்டுமின்றி தனது 15 ஆண்டு கால சாதனைக்காக கின்னஸ் உலக சாதனைகள் 2023 புத்தகத்திலும் இடம் பெறுவார். அதாவது தற்போது 18.1 சென்டி மீட்டர் அளவுக்கு காது முடியை வளர்த்துள்ளார்.
இதனால் இந்த வருட கின்னஸ் புக்கில் இடம் பெற்றுள்ளார். மேலும் இது போன்ற பல விதத்தில் இந்தியர்கள் சாதனை படைத்து வருகின்றனர். உலகில் ஒரு மனிதன் எந்த எந்த விஷயத்திலோ சாதனை படைத்து வரும் நிலையில், ஒரு தமிழன் காது முடியை வைத்து கின்னஸ் புக்கில் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.