தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி, பலி எண்ணிக்கை 4000 ஐ தாண்டியது!!!
மாவட்ட ஆட்சியரின் மகனுக்கு கொரோனா தொற்று:
தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாகவே கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டவது அலையின் வீரியம் மிக அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு தொடர்ந்து 20 ஆயிரத்தை தாண்டி வருகிறது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே மிக முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கொரோனா தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதன் காரணமாக தற்போது பல கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நடவடிக்கை அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் பாதிப்பு குறைந்த பாடில்லை. தற்போது அந்த வகையில் மேலும் ஓர் அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக திகழ்பவர் தான் அன்பழகன். தற்போது இவருடைய 17 வயது மகனுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்