மதுரையில் குழந்தைகளை விற்பனை செய்த கொடூரம் – நிர்வாகி, காப்பாளரை அதிரடியாக கைது செய்த போலீசார்!!

0

மதுரையில் நடந்த குழந்தை விற்பனை வழக்கு தொடர்பாக காப்பக உரிமையாளர் சிவகுமார், நிர்வாகி மதார்ஷா ஆகியயோர் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குழந்தை விற்பனை:

மதுரையில் இதயம் ட்ரஸ்ட் காப்பகத்தில் இருந்த ஒரு வயது குழந்தையான மாணிக்கத்தை காப்பக உரிமையாளர் சிவகுமார் மற்றும் அவரது நிர்வாகிகள் சேர்ந்து விற்றுவிட்டனர். மேலும் அந்த குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறி அதற்கான போலியான ஆவணங்களையும் தயார் செய்தனர். இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த காப்பகத்தில் இருந்து இதுபோல் பல குழந்தைகள் விற்கப்பட்டது கண்டறியப்பட்டது.

அமேசான் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ் – என்ன காரணம் தெரியுமா?

மேலும் காப்பகம் மூலம் விற்கப்பட்ட 1 வயது மாணிக்கம், 2 வயது தன்னம்மாள் ஆகியோர் காவல் துறையினரால் மீட்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக காப்பக ஊழியர் கலைவாணி, குழந்தை விற்பனை ப்ரோக்கர் செல்வி, ராஜா உள்ளிட்ட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர், ஆனால் காப்பக உரிமையாளர் சிவகுமார் மற்றும் நிர்வாகி மாதர்ஷா ஆகியோர் தலைமறைவாகினர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனிப்படை போலீசார் தேனியில் இவர்கள் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒலி வடிவில் கல்வி – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

பின் இவர்கள் இருவரையும் போலீசார் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசரணையில் நிதி பற்றாக்குறை காரணமாக குழந்தைகளை விற்பதாகவும் ஒவ்வொரு குழந்தையும் தலா ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். விசாரணைக்கு பின் இவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 7 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here