மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தற்போது மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். மத்திய அரசின் இம்முடிவை தொடர்ந்து பல மாநில அரசுகளும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன.
ஏற்கனவே மத்திய அரசின் முடிவை தொடர்ந்து குஜராத் மாநில அரசு 12 ஆம் வகுப்பு வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. குஜராத்தை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இனி இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில் தற்போது மத்திய பிரதேச அரசும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, மத்தியப் பிரதேச பள்ளி கல்வி வாரியம், ஜூன் முதல் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த திட்டமிட்டு இருந்தது. பின்னர் இந்த தேர்வுகளை கொரோனா தொற்று பாதிப்பால் ஒத்திவைத்திருந்தது. தற்போது மத்திய பிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!