இல்லத்தரசிகளை கவர்வதற்காகவே சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதன்படி ஜீ தமிழில் தினமும் இரவு 8 மணிக்கு மாரி சீரியல் டெலிகாஸ்ட்டாகி வருகிறது. இந்த சீரியலில் மாரியை அசிங்க படுத்துவதற்காக சிலர் திட்டமிட்ட பல சதி வேலைகளை செய்கின்றன. அந்த வகையில் சூர்யா, மாரி இருவரும் தங்களது முதல் இரவுக்காக தயாராகிவிட்டனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் இது பிடிக்காத ஹாசினி முதலிரவுக்காக கட்டிலை தயார் செய்ய அப்போது கட்டிலில் இருந்து இரண்டு நட்டுகளை கழட்டி விடுகிறார். இது தெரியாத சூர்யாவும் மாரியும் கட்டிலில் உட்கார எதிர்பாராத விதமாக கட்டில் உடைந்து விடுகிறது. இதனால் சூர்யாவுக்கு சுளுக்கு பிடித்துக் கொள்ள இதை சரி செய்ய மாரி எண்ணெய் வாங்கி சூர்யாவுக்கு தேய்த்து விடுகிறார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக +2 மாணவர்களுக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் – வெளியான முக்கிய அறிக்கை!!
இதை பார்த்த ஹாசினி, மீனா இருவரும் மாரியை கலாய்கின்றனர். இன்னொரு பக்கம் மாரியை பிடிக்காத ஜாஸ்மின், சங்கர பாண்டி, சகுந்தலா ஆகியோர் மாரி தூக்கும் சாமி சிலைக்கு பாம் வைக்க திட்டம் தீட்டுகின்றனர்.
மேலும் அந்த சிலையை மாரி தூக்கும் போது சிலை உடன் சேர்ந்து மாரியும் வெடித்து சிதற வேண்டும். இதனால் ஊர்மக்கள் அவளை அபசகுணம் பிடித்தவள் என்று திட்ட வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் இந்த சதி வேலை அவர்கள் நினைத்தது போல் நடக்குமா?? நடக்காதா?? என்று அடுத்து வரும் எபிசோட்டில் பொறுத்திருந்து பார்க்கலாம்.